Ad Widget

அரசமுகாமைத்துவ பதவி III க்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் 20ம் திகதி

அரச முகாமைத்து பதவி III க்கான போட்டிப் பரீட்சை 2012 (1) – 2016(2017) பரீட்சை எதிர்வரும் 20 ம்திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இந்த பரீட்சை எழுதுவதற்கு 8877 பேர் தகுதிபெற்றுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 64 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சைக்கான அனுமதிஅட்டை தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அனுமதி அட்டை தொடர்பில் ஏதேனும் விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமாயின் கீழ்க்கண்ட பரீட்சை திணைக்களத்தின் பிரிவுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்முடியும்.

தொலைபேசி இலக்கம் 011 2785230 / 011 2177075 / 1911 என்ன அவசர தொலைபேசியினூடாக 24 மணித்தியால சேவையினூடாகவும் விபரங்களை அறிந்துகொள்ளமுடியும்.

Related Posts