சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்றைய தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து பாடசாலை தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
பௌதீக வளங்கள் மற்றும் உரிய பாடங்களுக்கான ஆசிரிய வளங்கள் தொடர்பில் இதன்போத கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இக்கோரிக்கைகள் தொடர்பில் அவதானஞ் செலுத்திய அமைச்சர் அவர்கள் கூடிய விரைவில் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படுமெனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.