Ad Widget

அமானுஷ்ய உருவங்களால் பீதியில் ஒரு கிராமம்

தம்புத்தேகம ராஜபக்ஸகம கிராமத்தில் அமானுஷ்ய உருவங்கள் தமக்கு தொடர்ச்சியாக தென்படுவதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பெண், ஆண் மற்றும் சிறு பிள்ளையொன்றின் உருவங்களே தமக்கு தென்படுவதாகவும் பின்னர் உடனே அவை மறைந்து செல்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக ஏற்பட்ட பீதியில் பலர் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பகல் மற்றும் இரவு நேரங்களில் இவற்றைக் கண்டுள்ளதாக கூறும் கிராமவாசிகள் பலர் இதற்காக சாந்திக் கிரியைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அமானுஷ்யமான உருவங்களை பலர் தொடர்ந்தும் அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கிராமவாசியொருவர்:

” நான் பகல் வேளையில் நீரைத் திருப்பிவிடுவதற்காக வயலுக்கு சென்றிருந்தேன். அப்போது தீடிரென மூன்று உருவங்களைக் கண்டேன் , அவை உடனடியாக மறைந்துவிட்டன, பின்னர் எங்கு தேடியும் அவற்றைக் காண முடியவில்லை ” என்றார்.

ஆவிகள் , பூதங்கள் , அமானுஷ்ய சக்திகள் மீது நம்பிக்கையில்லாத அவர் இரவு நேரங்களில் வயலுக்குச் சென்று வந்ததாகவும் ஆனால் இச் சம்பவத்தின் பின் பயந்து போன அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவரது கால் பாதங்களில் காரணங்கள் ஏதுமின்றி கீறல்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிராமத்தை விட்டு வெளியேற வாய்ப்பில்லாதவர்கள் தமது வீடுகளுக்குள் பயத்தில் அடைந்து கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அங்கு விசேட சாந்தி கிரியைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

நன்றி – சூரியன்எப்எம்

Related Posts