சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் ஜெயரட்ணம் அமலன் கொலை வழக்கு விசாரணை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் படி மேலதிக விசாரணைக்காக நேற்று யாழ். மேல்நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது.
பொன் அணிகளின் போர் கிரிக்கெட் போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் ஜெயரட்ணம் அமலன் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இவர் துடுப்பாட்ட மட்டையினால் அடித்து கொல்லப்பட்டார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 8 மாதங்களாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையிலேயே சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் படி மேலதிக விசாரணைக்காக நேற்று யாழ். மேல்நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கொலை தொடர்பில் கைதான சந்தேக நபர்கள் 11 பேருக்கும் எதிரான பூர்வாங்க சாட்சி விசாரணைகள் முடிவுற்றிருந்த நிலையில், கடந்த வழக்கு தவணைகளில், சாட்சிகள் மீதான சுருக்க முறை விசாரணை மன்றில் இடம்பெற்று வருகிறது.