Ad Widget

அமலனின் நண்பர்களுக்கு அச்சுறுத்தல்!

Phoneயாழ். பொன் அணிகளின் ஒருநாள் துடுப்பாட்ட போட்டியின் போது கொலை செய்யப்பட்ட ஜெயரட்ணம் தர்ஷன் அமலனின் (23) மரணம் தொடர்பில் சாட்சியமளித்த அவரது நண்பர்கள் இருவருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அச்சுறுத்தலுக்கு உள்ளான அமலனின் இரு நண்பர்களுமே இந்த முறைப்பாட்டைச் செய்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் அன்ரனி விமல்நாத் மற்றும் அவரது நண்பரான அமிர்தலிங்கம் துஷ்யந்தன் ஆகியோரின் தொலைபேசிகளுக்கே இந்த அச்சுறுத்தல் அழைப்புக்கள் வந்துள்ளன.

மேற்படி இருவரும் அமலனின் கொலை தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் கடந்த 15ஆம் திகதி வாக்குமூலம் அளித்துள்ளனர் என பொலிஸார் கூறினர்.

சென். பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி அணிக்கும் இடையிலான பொன் அணிகள்ப்ன் போர் ஒருநாள் துடுப்பாட்ட போட்டி கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற போது, இரு கல்லூரிகளினதும் பழைய மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில், அமலன் கொல்லப்பட்டார்.

இது தொடர்பில் நால்வர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts