Ad Widget

அமரர் மு.சிவசிதம்பரத்தின் 14ஆவது நினைவு தினம் வடமராட்சியில் அனுஷ்டிப்பு!

நல்லூர், உடுப்பிட்டித் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உப சபாநாயகருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 14ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி நெல்லியடியில் இடம்பெற்றது.

siva-sithamparam

நெல்லியடி பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஏம்.ஏ.சுமந்திரன் உட்பட பலர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கரணவாய் மூத்தவிநாயகர் ஆலய திருமண மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டம் இடம்பெற்றது. இதில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட பயனாளிகள் அறுவருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts