Ad Widget

அனந்தி கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் பரவிய வதந்தி!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை உருவாக்கியிருந்தது. ஆனால், தான் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் யாழ்.நகர் பகுதியில் ஊடகவியலாளர்களை நேரில் சந்தித்த அனந்தி சசிதரன், தன்னை கைது செய்ததாக வெளியான செய்தி உண்மையில்லை என மறுத்தார்.

ananthi_sashitharan

நேற்று முன்தினம் தொடக்கம் தன்னுடைய வீடு மற்றும் அலுவலகம் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் தன்னுடைய நடமாட்டம் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் தன்னை கைது செய்வதற்கு எவ்விதமான காரணங்களும் அரசாங்கத்திடம் இருக்க முடியாது என அவர் கூறியதுடன், தன்னை கைது செய்ததாக கட்டுக்கதை பரப்பியவர்களும் அரச புலனாய்வாளர்களாகவே இருக்க முடியும் எனத் தெரிவித்தார். அத்துடன், பலர் என் தொலைபேசிக்கு அழைப்பு எடுத்துள்ளார்கள். நான் வெளி இடம் ஒன்றுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தமையினால் அந்த அழைப்பை என்னால் எடுக்க முடியவில்லை. எனினும் பின்னர் அழைப்பு எடுத்தவர்களுக்கு மீண்டும் அழைப்பை எடுத்து விடயத்தை கூறியிருப்பதாகவும் அனந்தி கூறினார்.

Related Posts