Ad Widget

அதிபரிடம் வாங்கிக்கட்டிய ஆசிரியை

பூகம்பம் ஏற்பட்ட நாடு என்னவென்று கூடத் தெரியாமல் நீர் எல்லாம் வரலாற்று ஆசிரியராக இருக்கின்றீர்களா? என்று அதிபர் ஒருவர் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரியை ஒருவரை திட்டிய சம்பவம், யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பாடசாலையொன்றில் வியாழக்கிழமை (17) நடைபெற்றுள்ளது.

சிலி நாட்டில் 8.30 ரிச்சர்ட் அளவில் புதன்கிழமை (16) பூமியதிர்ச்சி ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் வரலாற்று ஆசிரியர் அறிந்து வைத்திருக்கின்றாரா? என சோதிக்க எண்ணிய அதிபர், ஒரு மாணவனை அழைத்து, இன்று புதன்கிழமை எந்த நாட்டில் பூகம்பம் ஏற்பட்டது என வரலாற்று ஆசிரியரிடம் கேட்டுவருமாறு கூறியுள்ளார்.

அதிபர் கூறியவாறு மாணவனும் ஆசிரியையிடம் சென்று புதன்கிழமை (15) எந்த நாட்டில் பூகம்பம் ஏற்பட்டது என்று கேட்டுள்ளான். அதற்கு தெரியாது என்ற பதிலையே வரலாற்று ஆசிரியை மாணவனிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட அதிபர், மாணவர்களுக்கு மத்தியில் வைத்து, வரலாற்று ஆசிரியராக இருந்தும் உலகத்தில் நடக்கும் சம்பவங்கள், செய்திகள் பற்றி தெரியாதுள்ளீர்கள் என்று ஏசியுள்ளார்.

Related Posts