Ad Widget

அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு இணையான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என அரச ஊழியர்கள் கோரிக்கை!

அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு இணையான கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் பொதுச்செயலாளர் தம்மிக்க முணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கை செலவினம் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. உணவு பணவீக்கம் 80 சதவீதத்தினையும் கடந்துள்ளது.

அண்மையில் இடைக்கால வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்ட போதிலும், அதில் எவ்வித ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை.

எனவே அரசாங்கத்தின் பணவீக்கத்திற்கான கொடுப்பனவு வழங்க வேண்டும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் பொதுச்செயலாளர் தம்மிக்க முணசிங்க தெரிவித்துள்ளார்.

பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையினை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts