செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி பஸ் கட்டணங்கள் நூற்றுக்கு பத்து வீதம் அதிகரிக்கப்படவுள்ளன.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போத பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.