Ad Widget

அச்சுவேலி யுவதியை காணவில்லை

அச்சுவேலி இடைக்காடு பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக யுவதியின் பெற்றோர், ஞாயிற்றுக்கிழமை (05) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார், திங்கட்கிழமை (06) தெரிவித்தனர்.

சனிக்கிழமை(04) மாலை வீட்டில் உள்ள அனைவரும் அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த போது வீட்டிலிருந்த யுவதி காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts