Ad Widget

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை திறந்துவைத்தார் அமைச்சர் பஸில்!

இந்திய மற்றும் இலங்கை அரசின் நிதி பங்களிப்புடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ இன்று நண்பகல் 11.30 மணிக்கு திறந்துவைத்தார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அதிகார சபையின் ஏற்பாட்டில் அச்சுவேலியில் மீள்புனரமைப்பு செய்யப்பட்ட இந்தக் கைத்தொழில் பேட்டையில் 22 காட்சியறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

atchchuvely

இந்த நிகழ்வில் இந்திய தூதுவர் வை.கே.சிங்கா, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி , பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா உட்பட மற்றும் பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

64 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்தக் கைத்தொழில் பேட்டையின் மீள் நிர்மாணப் பணிகளுக்காக இந்திய அரசு சிறிய நன்கொடை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 225 மில்லியன் ரூபா நிதி உதவியையும் இலங்கை அரசு 50 மில்லியன் ரூபா நிதியுதவியையும் வழங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts