Ad Widget

அசாத் சாலியின் விடுதலையை வலியுறுத்தி யாழில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு அசாத் ஸாலியை விடுதலை செய்யக் கோரி யாழ்.முஸ்லிம் பள்ளி வாசலில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

யாழ்.ஐந்து சந்திப் பகுதியிலுள்ள இப்பள்ளி வாசலில் இன்று தொழுகை முடிந்ததும் விசேட பிரார்த்தனை ஒன்று நடாத்தப்பட்டது.

இதன்போது முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனாவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மற்றும் அசாத்ஸாலியின் விடுதலையை வலியுறுத்தி பதாகைகள் தொங்க விடப்பட்டன.

jaffna-muslim-1

jaffna-muslim-2

தொடர்புடைய செய்திகள்

அசாத் சாலி குற்றத்தை ஒப்புக்கொண்டார்? கைது குறித்து அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளவில்லை!- கோத்தபாய

அசாத்சாலியின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்

Related Posts