Ad Widget

விமலின் கடவுச்சீட்டு மீண்டும் வழங்கப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டு மீண்டும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அவரது கடவுச்சீட்டு இன்று மீள வழங்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த வௌ்ளிக் கிழமை கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

Related Posts