Ad Widget

வித்­தியா படு­கொ­லையின் மர­பணு அறிக்கை இன்று சமர்ப்­பிக்­கப்­படும்?

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் படு­கொலை தொடர்­பான மர­பணு அறிக்கை இன்­றைய தினம் வழக்கு விசா­ர­ணையின் போது மன்றில் சமர்ப்­பிக்­கப்­படுமென தெரியவருகின்றது.

கடந்த மே மாதம் குறித்த மாணவி கூட்டு பாலியல் வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இது தொடர்பில் ஊர்­கா­வற்­றுறை பொலி ஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் கொலை­யுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பெயரில் 9 பேர் கைது செய்­யப்­பட்டு அவர்கள் தொடர்­பான வழக்­குகள் ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றது.இந்­நி­லை­யி­லேயே அவர்கள் தொடர்­பான விசா­ரணை வழக்கு இன்­றைய தினம் மன்றில் எடுத்துக் கொள்­ளப்­ப­டும்­போது குறித்த மாணவியின் உடலில் இருந்து மீட்­கப்­பட்ட மர­பணு அறிக்­கைகள் இன்று மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­லா­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை குறித்த படு­கொலை தொடர்பில் மேலும் ஒருவர் கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தும் வகையில் அவர் உட்­ப­ட ­மேலும் இரு­வர் கொழும்பு மகசின் சிறைக்கு மாற்­றப்பட்டிருக்கின்றமை குறிப்­பி­டத்­தக்­கது.

Related Posts