Ad Widget

வாள்வெட்டில் மூவர் படுகாயம்

யாழ். கற்கோவளம் புனிதநகர் பகுதியில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இடத்தை சேர்ந்த நகுலன் சுஜாதா (வயது 25), சதீஸ் உசாந்தினி (வயது 22), திருச்செல்வம் சதீஸ் (வயது 26) ஆகியோரே படுகாயமடைந்தனர்.

காணிப் பிணக்கு தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த வாள்வெட்டுச் சம்பவத்துக்கு காரணம் எனத் தெரிவித்த பொலிஸார், வாள்வெட்டை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினர்.

Related Posts