வட்டுக்கோட்டை வழுக்கையாறு, இந்து மயானத்தில் எரிமேடையில் சடலங்களை எரியூட்டுவதற்கு விறகுகளை அடுக்குவதற்கான இரும்பு தூண்கள் நான்குகே கொள்ளையிடப்பட்டுள்ளன.
அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயானத்தில் பொருத்தியிருந்த மின் குமிழ்களையும் திருடர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து மயானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.