பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் மீனவர்களின் வலையில் சடலம் ஒன்று சிக்கியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கற்கோவளம் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் வலையில் இந்தச் சடலம் அகப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சடலத்தை அடையாளம் காண்பதற்காக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.