யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களாக பெய்துவரும் கடும்மழை காரணமாக, வடமராட்சிப் பிரதேசத்தில் தற்போது வயிற்றோட்டம் பரவி வருவதாக, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒலிபெருக்கி மூலம் கிராமம் கிராமமாக அறிவித்தல்கள் விடப்பட்டு வருகின்றன. குடிநீர், உணவருந்துதல் மற்றும் மலசலகூடங்களை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.