Ad Widget

வடக்கு நோக்கி செல்லவிருந்த நான்கு ரயில்கள் இரத்து

கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் இரவு நேர தபால் ரயில்கள் நான்கு சேவையில் ஈடுபடுத்தப்படமாட்டாது என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து காங்கேசந்துறை மற்றும் தலைமன்னார் நோக்கி செல்லும் ரயில்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி ஏற்கனவே முனபதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுக்களின் பணம் மீளவழங்கப்படும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு ரயில் பாதையின் அம்பத்பொல – கல்கமுவ வரையான பகுதியில் நேற்று பிற்பகல் 03.45 அளவில் ரயிலொன்று தடம்புரண்டதில் வட பகுதிக்கான ரயில் போக்குவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts