Ad Widget

ரி20 உத்தியோகப்பூர்வ கிண்ணம் நாளை இலங்கைக்கு

இந்தியாவில் எதிர்வரும் மார்ச் 08ஆம் திகதி 16 நாடுகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள ரி20 உலகக் கிண்ணத் தொடரின் உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கைக்கும் வரவுள்ளது.

உலகம் முழுவதும் வலம் வரும் இக்கிண்ணம், நாளை (16) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இலங்கையில் காட்சிப்படுத்தப்படும்.

இக்கிண்ணமானது மக்கள் பார்வைக்காக எதிர்வரும் 17ஆம் திகதி காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

கடந்த 2014 இல் பங்களாதேஷில் இடம்பெற்ற இத்தொடரின் கிண்ணத்தை இலங்கை அணி தனதாக்கிக் கொண்டது.

ரி20 கிண்ணத்திற்கான தொடர் கடந்த 2007 முதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts