தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் நேற்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் கொண்டாடப்பட்டது.
தேசிய தலைவரின் 61 வது பிறந்தநாள் நேற்று உலகில் பல்வேறு நாடுகளில் தமிழர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், இராணுவ நெருக்குவாரங்களால் இலங்கையில் கொண்டாடப்படக் சூடிய சூழ்நிலை இருக்கவில்லை.
எனினும், நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரத்தியேக இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் மாணவர்களால் நடத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆனையிறவு வெளியில் நேற்று அதிகாலை தொடக்கம் தமிழீழத் தேசிய கொடி பறந்து கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.