அளுத்கம, தர்காநகர், பேருவளை ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் மற்றும் தாக்குதல்களைக் கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாளை பகல் 12 மணி முதல் 1 மணிவரையும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், கல்விசார ஊழியர்கள், மற்றும் மாணவர்கள் இணைந்து கண்டனப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.
பல்கலைக்கழக பிரதான வாயிலில் இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவிரோதச் செயற்பாடுகள், உயிர்கள் பறிக்கப்பட்டமை, சொத்துக்கள் நாசமாக்கப்பட்டமை போன்றவற்றிற்கு எதிராகக் குரல் கொடுக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.