யாழ்.நகரில் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு பொதிகள் பரிமாற்று சேவை நிலையம் ஒன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.
யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவின் துரித செயற்பாட்டினால் தீ பரவுவது தடுக்கப்பட்டு சேதங்களும் தடுக்கப்பட்டது.
நேற்றிரவு 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கார்த்திகை தீப திருநாளான நேற்று ஏற்றி வைக்கப்பட்டிருந்த சுட்டி விளக்கே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.