Ad Widget

யாழ்.நகரில் பொதிகள் பரிமாற்ற சேவை நிறுவனத்தில் தீப்பற்றியது!

யாழ்.நகரில் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு பொதிகள் பரிமாற்று சேவை நிலையம் ஒன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.

யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவின் துரித செயற்பாட்டினால் தீ பரவுவது தடுக்கப்பட்டு சேதங்களும் தடுக்கப்பட்டது.

நேற்றிரவு 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கார்த்திகை தீப திருநாளான நேற்று ஏற்றி வைக்கப்பட்டிருந்த சுட்டி விளக்கே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

Related Posts