Ad Widget

யாழ்.சாலை முகாமையாளரின் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக கவனயீர்ப்பு

இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்.சாலை முகாமையாளரின் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக இன்று யாழ்.பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

jaffna-bus-stant-ctb

இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைமையகத்தால் மூன்று கட்டமான விசாரணைகள் இடம்பெற்றபோதிலும் எந்த விதத்திலும் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

நிர்வாகக் குழுவின் அனுமதியைப் பெறாமல் சுயமாக முடிவுகள் எடுத்தல்,ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஒழுங்கீனம்,மதுப்பாவனையுடன் வேலைக்கு ஊழியர்களை அனுமதித்தமை,ஊழியர்களின் அனுமதியின்றி ஊதியங்கள் கழிக்கப்படுதல் போன்ற பல அதிருப்தியான பணிகளைக் கண்டித்தே இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

Related Posts