Ad Widget

யாழ்.ஆயருடன் ரணில் சந்திப்பு!, தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

ranil_jaffnaரணில் விக்கிமசிங்கவிற்கும் யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்திற்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.

வடமாகாண சபைத் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் நோக்குடன் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆயருடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் நேற்றய தினம் யாழ்ப்பாணத்திற்கு வந்த ரணில் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு நடாத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts