Ad Widget

யாழ்தேவியில் மோதி வயோதிபர் பலி

யாழ்.தேவி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதி வழியான 392 வது கிலோ மீற்றர் கட்டையை அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் குருநகர் பகுதியைச் சேர்ந்த தேவசகாயம் ஏனோக் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று காலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பை நோக்கி சென்ற யாழ்.தேவி புகையிரதத்தில் மோதியே முதியவர் உயிரிழந்துள்ளார.

சம்பவம் தொடர்பான விசாரணையினை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts