Ad Widget

யாழில் 400 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி!!

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார்.

யாழ்ப்பாணம் , தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்படவுள்ளது.

நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளுக்கான அழைப்பு கடிதங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் அனுப்பி வைக்கபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts