Ad Widget

யாழில் பட்ஜெட்டுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது பட்ஜெட்டிலேயே வங்கித் துறை பாதாளத்தை நோக்கிச் செல்வதாகக் கூறி இன்று மதியம் 12.30 மணிக்கு இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

ஏராளமான வங்கி ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

“அரச ஊழியர்களின் ஓய்வூதியக் கத்தரிப்பை நிறுத்து”,
“EPF- ETF நிதிகள் ஆபத்தில் – உறுபினர்களே விழித்திடுங்கள்”,
“வங்கிகளிடம் இருந்து அகற்றப்படும் லீசிங் மற்றும் அடகுக் கடன்கள்”,
“ஏற்றுமதி – இறக்குமதிச் செயற்பாட்டை வங்கிகளிடமிருந்து அகற்றுவதால் அனைத்து வங்கிகளும் ஆபத்தில்” போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர்.

Related Posts