Ad Widget

யாழில் சிறைக்கைதிகள் விடுதலை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் நாடளாவிய ரீதியில் சிறைக்கைதிகள் இன்று விடுவிக்கப்பட்ட நிலையில் யாழ் மாவட்டத்திலும் சிறைக்கைதிகள் நேற்று (25) விடுவிக்கப்பட்டனர்.

சிறுகுற்றம் புரிந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறையில் இருந்தவர்கள் என ஒரு பெண் உள்ளிட்ட எட்டுபேர் விடுதலைசெய்யப்பட்டனர்.

யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரி எஸ்.இந்திரகுமார் தலைமையில் இந்நிகழ்வு யாழ் மத்திய சிறைச்சாலையில் இடம்பெற்றது.

Related Posts