பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வலியுறுத்தியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சர்வமத குழுவினர் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்துடன், கையெழுத்துப் பெரும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, யாழ். நகரப்பகுதியில் சர்வமத தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதேவேளை, யாழ். நகரப் பகுதியில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் கையெழுத்துப் பெறும் செயற்பாடு முன்னெடுக்கப்படுமென சர்வமத குழு ஒன்றிய இணைப்பாளர் பங்குத் தந்தை ஐ.டி. டிக்சன் மேலும் கூறினார்.