Ad Widget

யாழில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்

தற்போதைய அரசாங்கம் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கறுப்புக் கொடி ஏந்தி போராடவுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 13ம் திகதி யாழ் பஸ் தரிப்பிடத்திற்கு எதிரில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமை, பாதுகாப்பு படையினர் வசமுள்ள மக்களின் நிலங்களை விடுவிக்காமை, காணாமல் போனோர் குறித்து உரிய பதிலளிக்காமை, யுத்தக் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்காமை போன்ற காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts