இலங்கை தேசிய அரசாங்கத்தின் 2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை எதிர்த்து தேசியளவில் மேற்கொள்ளப்படும் வைத்தியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் யாழ்.மாவட்ட வைத்தியர்களும் இணைந்துள்ளனர்.
தேசிய வரவு செலவு திட்டத்தில் வைத்தியர்களுக்கான தீர்வையற்ற வாகன கொடுப்பனவு நிறுத்தப்பட்டமை உள்ளிட்ட பல குறைபாடுகளை சுட்டிக்காட்டி தேசிய மட்டத்தில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன் ஒரு அங்கமாகவே யாழ்.மாவட்டத்திலும் பணி புறக்கணிப்பு மேற்கோள்ளப்கடுகின்றது.
இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பை மேற்கொண்டுள்ள நிலையில் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலையில் நின்றுகொண்டிருக்கின்றனர்.