Ad Widget

மீனவர் பிரச்சினைக்கு விக்னேஸ்வரன் கூறும் தீர்வு

இந்திய – இலங்கை மீனவர்கள் குறித்து இரு நாட்டு அரசியல் தலைவர்களும் கலந்து பேசுவதால் சரியான தீர்வு கிடைக்காது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு மீனவ சங்கப் பிரதிநிதிகளும் இது குறித்து கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சினை குறித்து இரு நாட்டு அரசியல் தலைவர்களும் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியுள்ள போதும், சரியான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts