மதுபான சாலைகளைத் திறக்கும் முடிவை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

மதுபான சாலைத் திறப்பதற்கு அனுமதியளித்துள்ள முடிவை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளது.

நாட்டில் கோரோனா பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது கடந்த மார்ச் 20ஆம் திகதிக்குப் பின்னர் மதுபான சாலைகள் மூடப்பட்ட நிலையில் கடந்த மாதம் 21ஆம் திகதி மீளத் திறக்க அனுமதிக்கப்பட்டது. எனினும் அன்றைய தினத்துடன் மறு அறிவித்தல்வரை மதுபான சாலைகள் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் 3 வாரங்களின் பின்னர் மதுபான சாலைகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுபான சாலைத் திறப்பதற்கு அனுமதியளித்துள்ள முடிவை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளது.

Related Posts