சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு கசிப்பு விற்ற அச்செழு பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை புதன்கிழமை (22) இரவு கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு வாங்குபவர்கள் போல, சிவில் உடையில் பொலிஸார் சென்றுள்ளனர்.
200 ரூபாய் பணத்தைக் கொடுக்க சந்தேகநபர், 750 மில்லிலீற்றர் கசிப்பை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
இதன்போது, அந்நபரை கைது செய்த பொலிஸார், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்;ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.