Ad Widget

பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்புவேன் – யாழ்.ஆயர் உறுதி

போரினால் பாதிக்கப்பட்ட கணவரை இழந்த பெண்களிற்காகவும்,அரசியல் கைதிகளிற்காகவும், இன்னமும் முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களிற்காகவும் குரலெழுப்புவேன் என யாழ்.மறை மாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் பேர்னாட் ஞானபிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

போர் முடிவடைந்து ஆறுவருடங்களாகின்றன பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனது மறைமாவட்டம் குறித்தும் அது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து எனக்கு நன்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். போரால் பாதிக்கப்பட்ட பலர் இன்னமும் தங்கள் வீடுகளிற்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர், தங்கள் மண்ணிற்கு திரும்பும் நாளை எதிர்பார்த்துள்ளனர்.

தமிழ் மக்களின் கவலைகளிற்கும் கரிசனைகளிற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும், எங்கள் மக்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பதற்காக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts