Ad Widget

பாடசாலை சேவை வாகனங்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக யாழ். மாவட்டத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் அனைத்துத் தனியார் வாகனங்களும் யாழ்.மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் யாழ்.மாவட்ட உளசமூக அதிகாரி பூ.கெளதமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் சில பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்ற துஷ்பிரயோகங்களை முற்றாகத் தடுப்பதற்கும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக பாடசாலை சேவையில் ஈடுபடுகின்ற அனைத்து வாகனங்களையும் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பாடசாலை சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகள், பேருந்துகள், ஹயஸ் வாகனங்கள் என்பவற்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து யாழ்.மாவட்ட செயலக மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்படவுள்ளன.

குறித்த நாட்களுக்கு பின்னர் பதிவுகளை மேற்கொள்ளாத வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடி க்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts