Ad Widget

பஸ்ஸில் திருடியவர் பயணிகளால் நையப்புடைக்கப்பட்டார்

பஸ்ஸில் பயணிகளின் பணப் பை மற்றும் கைபைகளில் இருந்து பணத்தை திருடிய நபரை பிடித்து பயணிகள் நையப்புடைத்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று திங்கட்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமத்துக்கு செல்லும் பஸ்ஸில் பயணித்த குறித்த நபர், பயணிகளின் பணப்பை மற்றும் கைபைகளில் இருந்து பணத்தை திருடியுள்ளார். இதனை அவதானித்த சக பயணிகள் அவரை மீசாலை பகுதியில் வைத்து நையப்புடைத்து கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபர், நல்லூர் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபர் என தெரிவித்த பொலிஸார், அவரிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டுள்ளனர்.

Related Posts