Ad Widget

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவும்: யாழில் சுவரொட்டி

நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அத்துடன், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி அதனுடன் இணைந்து, மற்றுமொரு சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளது.

சமவுரிமை இயக்கம் என்ற பெயரில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts