இனந்தெரியாத நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் தன்னை பின்தொடர்ந்து வந்ததாக நல்லூர் பிரதேச செயலாளர் பா.செந்தில் நந்தனன் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
அலுவலக கடமைகளுக்காக தனது வாகனத்தில் நல்லூர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போதே மேற்படி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தன்னை பின்தொடர்ந்து வந்ததாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாஇணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினர்.