வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டிருந்த இடையூறானது, தாழமுக்கமாக மாறியுள்ளது.
இலங்கையில் இருந்து தென்கிழக்கு திசையில் இது நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் மேகம் சூழ்ந்த மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நிகழும் மழையுடனான கூடிய மழை காரணமாக, நாட்டில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக ராஜாங்கனை மற்றும் இரணைமடு ஆகிய குளங்களின் அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் புத்தளம், மன்னார் மற்றும் கிளநொச்சி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன.
இதற்கிடையில் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் சிறிய அளவிலான புயல் ஒன்று வீசியதில் 50க்கும் அதிகமான வீடுகள் சேதடைந்துள்ளன.
அவற்றில் ஐந்து வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.