மீசாலை புத்தூர் வீதியில் இன்று (06) காலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தூரைச் சேர்ந்த யேசு அன்று (வயது 25), சின்னக்குட்டி உதயராசா (வயது 51) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். திருமணச்சடங்கு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், பஸ்ஸின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.