தமிழர் உரிமை வெற்றிபெற ஜய வருடத்தில் பிரார்த்திப்போம் – சரவணபவன் எம்.பி

Saravanabavan _sara -mpமலரும் சித்திரைப் புத்தாண்டு தமிழ் மக்களுக்கு சுபீட்சமாகவும் சாந்தி சமாதானத்தைப் பெற்றுத் தருவதாகவும் இருக்க வேண்டும். நீண்ட நெடுங்காலமாகப் பட்ட துயரங்கள் நீங்கி தமிழர் உரிமைகள் வெற்றிபெறும் வருடமாக ஜய வருடம் அமைய பிரார்த்திப் போமாக.

இவ்வாறு தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது

“ஜய’ என்றால் வடமொழியில் வெற்றி என்று பொருள்படுகிறது. பிறந்திருக்கும் “ஜய’ வருடத்தில் தமிழர் வாழ்வு ஒளி பெற்று உரிமைகளை வென்று வெற்றியை வெளிப்படுத்த வேண்டும். தமிழ் வருடங்களான 60 வருட சுற்றில் 28ஆவது வருடமாக ஜய வருடம் வருகிறது.

ஜய வருடம் வெற்றி வருடமாக மலர்கின்ற போதும் தமிழர் பிரதேசத்தில் எமது மக்கள் இன்றளவும் பல்வேறு நெருக் கடிகளை சந்தித்த வண்ணமே உள்ளனர். போர்க் காலத்திலும் சரி போர் முடிவுற்ற பின்னரான காலத்திலும் சரி எமது மக்கள் மீதான கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இப்படியான நெருக்கடிகளில் இருந்து நாம் விடுபட வேண்டும். எமது மண்ணில் எல்லா உரிமைகளையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வதற்கு மலரும் ஜய வருடத்தில் நாம் பிரார்த்திப்போம்.

எத்தகைய நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டாலும் தமிழர் பாரம் பரியமும் பண்பாட்டு விழுமியங்களும் எம்மிடத்தில் இருந்து அழிந்துபோய் விடவில்லை. இன்றளவும் தமிழர் வாழ்வில் அவை ஒளியாய் வீசிக்கொண்டே இருக்கின்றன.

பறிக்கப்பட்ட உரிமைகளை ஜனநாயக வழியில் வென்று பேதங்கள் இன்றி இந்த ஜய வருடத்தில் நாம் முன்னேறுவோமாக. பிறந்திருக்கும் இந்த புதுவருடத்தில் அனைத்து மக்களுக்கும் சுபீட்சமும் நல்வாழ்வும் கிட்ட இறைவனை வேண்டி அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts