Ad Widget

தன்னைப் பார்த்து பிரம்மித்த ஜனாதிபதி

புகைப்படக் காட்சியில் வைக்கப்பட்டிருந்த தனது புகைப்படத்தினைப் பார்த்து பிரம்மித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

mathiri_3

‘ஜனாதிபதி அபிமங்கள வருட புகைப்படநினைவுகள்’ கண்காட்சி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக் கண்காட்சியை திறந்து வைத்து விட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை பார்வையிட்டிருந்தார்.

இங்கு ஜனநாயக ஆட்சியின் ஓராண்டு பூர்த்தி விழாவுடன் இணைந்ததாக ஜனாதிபதி புகைப்படக் கலைஞர் திரு.சுதத் சில்வா புகைப்படமெடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியின் முதலாம் வருடத்துடன் தொடர்பான விசேட நிகழ்வுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்து விட்டு தான் பிரம்மிப்பு அடைந்ததாகவும், தன்னுடைய படங்களும் சேகரிக்கப்பட்டு, அவையும் பாதுகாப்படும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும், தனது படங்கள் தனக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தன என்றும் ஜனாதிபதி அதிகாரிகளிடத்தில் தெரிவித்துள்ளார்.

Related Posts