Ad Widget

செந்தூரனின் சகோதரிக்கு உதவி!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த மாணவன் செந்தூரனின் சகோதரிக்கு, மடிக்கணினியும், பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்காக ஆரம்பக்கட்ட நிதியுதவியும் இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனால் மாணவியின் இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது.

குறித்த மாணவி சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே, அவரின் முயற்சியால் மடிக்கணினியும், பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கான ஆரம்பகட்ட நிதி உதவியாக 31ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவியின் எதிர்கால பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கு தேவையான நிதி உதவியை வழங்குவதற்கு புலம்பெயர் உறவுகள் முன்வந்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

Related Posts