Ad Widget

சுன்னாகத்தில் தொடர்கிறது இளைஞர் கும்பலின் அட்டகாசம்!

சுன்னாகம் கந்தரோடை மடம் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிள்களில் வாள்கள், பொல்லுகள், தடிகள் சகிதம் வந்த இளைஞர் கும்பல் ஒன்று அந்தப் பகுதியில் உள்ள பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டின் வேலிகளை வெட்டி வீழ்த்தியதுடன் அந்த வீட்டில் இருந்த கல்வி கற்கும் மாணவனையும் தாக்கி அட்டகாசம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.

குறிப்பிட்ட வீட்டுக்காரர்களுக்கும் அயல் வீட்டுக்காரர்களுக்கும் இடையே நிலவிய பகை காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுன்னாகம் பொலிஸாருக்கு இரவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் குறிப்பிட்ட இடத்திற்க்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட போதிலும் இதுவரையில் குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் எவரும் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, பொலிஸார் குறிப்பிட்ட இரு பகுதியினரையும் சமாதானமான முறையில் செல்லும்படி கூறினர் எனவும் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Related Posts