கூட்டமைப்பின் நெல்லியடிக் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய துண்டுப்பிரசுரம்!

நெல்லியடியில் நேற்று மாலை இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இனந்தெரியாத- மர்ம நபர்கள் சிலரால் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

வீசப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் தேசியத் தலைவரின் மண்ணில் தேசத்துரோகியா என்று தலைப்பிடப்பட்டு இரண்டு பக்கங்களிலும் பல்வேறு விடயங்கள் அச்சிடப்பட்டிருந்தன.

வடமராட்சி வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம், யாழ்ப்பாணம் என்ற பெயரில் அது வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா உட்பட கட்சியின் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போதும், இதுபோன்ற பல அநாமதேய பிரசுரங்கள் மர்மநபர்களால் வெளியிடப்பட்டன.

அத்துடன், உதயன் நாளிதழ் போல போலி நாளிதழ் அச்சிடப்பட்டு, சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, நேற்றுமாலை யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய மூன்று கூட்டங்கள் மானிப்பாய், நெல்லியடி உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்றிருந்தன.

tna-meeting-1

tna-meeting-notes-1

tna-meeting-notes-2

Related Posts