Ad Widget

காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் மரணம்!

காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட வன்னியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயனளிக்காத நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளார்.

அம்பாள்புரம், வவுனிக்குளத்தைச் சோந்த சாள்ஸ் ஜெயந்தினி (வயது 25) என்பவர் காய்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 13ஆம் திகதி இரவு மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட பெண் மேலதிக சிகிச்சைக்காக 14 ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு அன்று பிற்பகல் 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையில் அன்று இரவு 7.30 மணியளவில் உயிரிழந்தார். மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவருடைய மரணத்துக்கான காய்ச்சல் எந்த வகையை சேர்ந்தது என அடையாளம் காணப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts