Ad Widget

காணாமல் போனோர் ஆணைக்குழு விசாரணை : துயரம் தாங்காது மயங்கி விழும் சாட்சிகள்!

காணாமல் போனோர் ஆணைக்குழு தமது விசாரணைகளை யாழ்ப்பாணத்தில் நடத்திவருகின்ற நிலையில் இன்றைய தினம் சாட்சியளிக்கவந்த பாதிக்கப்பட்ட பலர் துயரத்தை கூறிக்கொண்டிருந்த வேளையில் மயங்கிவிழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இரண்டாவது நாள் அமர்வுகளை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை தொடர்ந்துள்ளது.

இன்றைய தினம் பலர் ஆணைக்குழு முன்னிலையில் தற்சமயம் சாட்சியங்களை பதிவுசெய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சாட்சியளித்துக் கொண்டிருந்த சிலர் துயரத்தை தாங்கமுடியாது கண்ணீர்மல்கியபடி அதே இடத்தில் மயங்கிவிழுந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related Posts